Wednesday, January 16, 2008

லிமரைக்கூ....

*வங்கிகள் கொடுக்கும் கடன்
வட்டிக் கணக்கை பார்த்த பின்னே
வேதனை வந்திடும் உடன்.
*அறிவை வளர்க்குமிடம் பள்ளி
சகுனம் பார்த்த ஆசிரியை முறைக்க
சுவற்றில் கத்தும் பல்லி
*சிறுமிக்கு கூட திருமணம்
இன்னும் திருந்தாத மடமை மக்கள்
கைம்பெண்ணுக்கு மறுக்கிறார் மறுமணம்.
*சூறாவளியால் எண்ணற்றோர் பலி
எவ்வளவு நிவாரணம் கொடுத்தாலும் தீராது
பாதிக்கப் பட்டோரின் வலி.
*யானையின் பலம் தும்பிக்கை
வாழ்க்கையில் வெற்றி கிட்டும் வரையில்
நமக்கு வேண்டும் நம்பிக்கை.

No comments: