Sunday, February 24, 2008

அற்புத மலர்

காதலிப்பவர்கள்
மிகவும் கொடியவர்கள்...
பெற்றோர்களை மதிக்காத
பயங்கர தீவிரவாதிகள்...
இவர்களுக்கு தண்டனை
தற்கொலையன்றி வேறில்லை...
காதல் ஒரு பாவச்செயல்!

இந்து முன்னணியினரின்
எதிர்ப்புப் போராட்டம்
காவல் துறையினரின்
ஒடுக்கு முறைகள்
சாதி வெறியர்களின்
அடங்காத கோபத்தில்
காதல் ஒரு பாவச்செயல்!!

ஆண்டாண்டு காலமாய்
அனைத்தையும் தாண்டி
எங்கோ ஒரு மூளையில்
நாள்தோறும் அழகாய்
பூத்து விடுகின்றது பிறரறியாமல்
காதல் என்கிற அற்புதமலர்.

No comments: