சொல்ல முடியாத
வலிகள் நெஞ்சில்
புதைந்து கிடக்கின்றன
ஒவ்வொரு வீட்டிற்குள்ளும்...
முகம் கொடுத்துப் பேச
மறுக்கும் படியாக
மாறிப்போன
மனநிலையில் சிலர்...!
மீளமுடியாதளவுக்கு
குடும்ப வரலாற்றை
கொட்டித் தீர்க்கும்
வேதனையில் சிலர்...!
எதுவுமே நடக்காதது
போன்றதொரு மாயைகாட்டி
உள்ளுக்குள் புழுங்கும்
அறிவாளிகள் சிலர்...!
எப்படியோ ஒரு வகையில்
பாதுகாக்கின்றார்கள்....!
அவரவர்களுக்கான வேதனையை
மனக்கிடங்கில்...!
Monday, March 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment