Sunday, July 27, 2008

தொடர்கிறது...

மண்ணுக்கும்
விண்ணுக்குமான தொடர்புகள்
இன்னும் தொடர்கிறது...

காற்றுக்கும்
கடலுக்குமான தொடர்பில்
புயல் உருவாகிறது!

மலைக்கும்
அருவிக்குமான தொடர்பு
மழையில் வலுக்கிறது...

ஊருக்கும்
சேரிக்குமான தொடர்பு
முடிய மாட்டேன் என்கிறது...

பெண்ணுக்கும்
மண்ணுக்குமான சண்டை
இன்றுவரை நிகழ்கிறது!

தலைமுறைகள்
உறவுகளைத் தேடிட
குலதெய்வங்கள் வாழ்கிறது...

பண்பட ....

அவள் நாவிலிருந்து
வந்து விழும் எளிதான
வசைச் சொற்கள்
என் மரத்தின் ஆழத்தில்
ஆணி வேரையே
சாய்த்து விடுகிறது

காலம் கடந்து
கற்றுக் கொள்கிறேன்
இன்னொரு பாடம்
நிம்மதி தொலைந்து
புகலிடம் தேடி
ஓடி...ஓடி... அலைகிறேன்

புரிந்தவர்களின் அரவணைப்பும்
புரியாதோரின் அறிவுரையும்
பண்பட வைக்கிறது.