Sunday, July 27, 2008

பண்பட ....

அவள் நாவிலிருந்து
வந்து விழும் எளிதான
வசைச் சொற்கள்
என் மரத்தின் ஆழத்தில்
ஆணி வேரையே
சாய்த்து விடுகிறது

காலம் கடந்து
கற்றுக் கொள்கிறேன்
இன்னொரு பாடம்
நிம்மதி தொலைந்து
புகலிடம் தேடி
ஓடி...ஓடி... அலைகிறேன்

புரிந்தவர்களின் அரவணைப்பும்
புரியாதோரின் அறிவுரையும்
பண்பட வைக்கிறது.

No comments: