Sunday, July 27, 2008

தொடர்கிறது...

மண்ணுக்கும்
விண்ணுக்குமான தொடர்புகள்
இன்னும் தொடர்கிறது...

காற்றுக்கும்
கடலுக்குமான தொடர்பில்
புயல் உருவாகிறது!

மலைக்கும்
அருவிக்குமான தொடர்பு
மழையில் வலுக்கிறது...

ஊருக்கும்
சேரிக்குமான தொடர்பு
முடிய மாட்டேன் என்கிறது...

பெண்ணுக்கும்
மண்ணுக்குமான சண்டை
இன்றுவரை நிகழ்கிறது!

தலைமுறைகள்
உறவுகளைத் தேடிட
குலதெய்வங்கள் வாழ்கிறது...

1 comment:

Anbinnayagan said...

சிறந்த விழிப்புணர்வு கவிதை