மண்ணுக்கும்
விண்ணுக்குமான தொடர்புகள்
இன்னும் தொடர்கிறது...
காற்றுக்கும்
கடலுக்குமான தொடர்பில்
புயல் உருவாகிறது!
மலைக்கும்
அருவிக்குமான தொடர்பு
மழையில் வலுக்கிறது...
ஊருக்கும்
சேரிக்குமான தொடர்பு
முடிய மாட்டேன் என்கிறது...
பெண்ணுக்கும்
மண்ணுக்குமான சண்டை
இன்றுவரை நிகழ்கிறது!
தலைமுறைகள்
உறவுகளைத் தேடிட
குலதெய்வங்கள் வாழ்கிறது...
Sunday, July 27, 2008
பண்பட ....
அவள் நாவிலிருந்து
வந்து விழும் எளிதான
வசைச் சொற்கள்
என் மரத்தின் ஆழத்தில்
ஆணி வேரையே
சாய்த்து விடுகிறது
காலம் கடந்து
கற்றுக் கொள்கிறேன்
இன்னொரு பாடம்
நிம்மதி தொலைந்து
புகலிடம் தேடி
ஓடி...ஓடி... அலைகிறேன்
புரிந்தவர்களின் அரவணைப்பும்
புரியாதோரின் அறிவுரையும்
பண்பட வைக்கிறது.
வந்து விழும் எளிதான
வசைச் சொற்கள்
என் மரத்தின் ஆழத்தில்
ஆணி வேரையே
சாய்த்து விடுகிறது
காலம் கடந்து
கற்றுக் கொள்கிறேன்
இன்னொரு பாடம்
நிம்மதி தொலைந்து
புகலிடம் தேடி
ஓடி...ஓடி... அலைகிறேன்
புரிந்தவர்களின் அரவணைப்பும்
புரியாதோரின் அறிவுரையும்
பண்பட வைக்கிறது.
Sunday, April 6, 2008
Sunday, March 9, 2008
பூமி...
பேராசை கொண்ட மாந்தன்
மரங்களை வெட்டினான்
காடுகள் அழிந்து போயின
விலங்குகள் ஊருக்குள்...
பறவைகள் புகலிடம் தேடி
பறந்து திரிகின்றன...
பலஅரிய உயிரினங்கள் இன்று
அழிந்து வருகின்றன...
காற்று நஞ்சாகிப் போனது
அறிவியல் வளர்ச்சியால் !
ஓசோனில் ஓட்டை விழுந்தது
நச்சுப் புகை சுழற்சியால்
நிலநடுக்கம்,சுனாமி,காட்டுத்தீ
காரணமென்ன தெரியுமா ?
தன்னலம் கொண்ட மாந்தனின்
தவறுதானென்று புரியுமா !
நாளைய தலைமுறை பற்றிய
கவலை கொள்...
அவர்கள் வாழ்ந்திட சூழலை
விட்டுச் செல்...
இன்றுநான் நாளை நீ மண்ணுக்குள்
என்பதை புரிந்துகொள்...
என்றும் அழியாதது பூமிதான்
தெரிந்துகொள்...
உயிர்கள் வாழ வளியை
கொடுக்கும் பூமி
அணுகுண்டு ஏவுகணைகளின் வலியை
தாங்கிடும் பூமி
பல்லாயிரம் உயிர் இனங்களை
கண்டதிந்த பூமி
பல கோடி ஆண்டுகள்
வாழுமிந்த பூமி...
மரங்களை வெட்டினான்
காடுகள் அழிந்து போயின
விலங்குகள் ஊருக்குள்...
பறவைகள் புகலிடம் தேடி
பறந்து திரிகின்றன...
பலஅரிய உயிரினங்கள் இன்று
அழிந்து வருகின்றன...
காற்று நஞ்சாகிப் போனது
அறிவியல் வளர்ச்சியால் !
ஓசோனில் ஓட்டை விழுந்தது
நச்சுப் புகை சுழற்சியால்
நிலநடுக்கம்,சுனாமி,காட்டுத்தீ
காரணமென்ன தெரியுமா ?
தன்னலம் கொண்ட மாந்தனின்
தவறுதானென்று புரியுமா !
நாளைய தலைமுறை பற்றிய
கவலை கொள்...
அவர்கள் வாழ்ந்திட சூழலை
விட்டுச் செல்...
இன்றுநான் நாளை நீ மண்ணுக்குள்
என்பதை புரிந்துகொள்...
என்றும் அழியாதது பூமிதான்
தெரிந்துகொள்...
உயிர்கள் வாழ வளியை
கொடுக்கும் பூமி
அணுகுண்டு ஏவுகணைகளின் வலியை
தாங்கிடும் பூமி
பல்லாயிரம் உயிர் இனங்களை
கண்டதிந்த பூமி
பல கோடி ஆண்டுகள்
வாழுமிந்த பூமி...
Monday, March 3, 2008
மனக்கிடங்கு
சொல்ல முடியாத
வலிகள் நெஞ்சில்
புதைந்து கிடக்கின்றன
ஒவ்வொரு வீட்டிற்குள்ளும்...
முகம் கொடுத்துப் பேச
மறுக்கும் படியாக
மாறிப்போன
மனநிலையில் சிலர்...!
மீளமுடியாதளவுக்கு
குடும்ப வரலாற்றை
கொட்டித் தீர்க்கும்
வேதனையில் சிலர்...!
எதுவுமே நடக்காதது
போன்றதொரு மாயைகாட்டி
உள்ளுக்குள் புழுங்கும்
அறிவாளிகள் சிலர்...!
எப்படியோ ஒரு வகையில்
பாதுகாக்கின்றார்கள்....!
அவரவர்களுக்கான வேதனையை
மனக்கிடங்கில்...!
வலிகள் நெஞ்சில்
புதைந்து கிடக்கின்றன
ஒவ்வொரு வீட்டிற்குள்ளும்...
முகம் கொடுத்துப் பேச
மறுக்கும் படியாக
மாறிப்போன
மனநிலையில் சிலர்...!
மீளமுடியாதளவுக்கு
குடும்ப வரலாற்றை
கொட்டித் தீர்க்கும்
வேதனையில் சிலர்...!
எதுவுமே நடக்காதது
போன்றதொரு மாயைகாட்டி
உள்ளுக்குள் புழுங்கும்
அறிவாளிகள் சிலர்...!
எப்படியோ ஒரு வகையில்
பாதுகாக்கின்றார்கள்....!
அவரவர்களுக்கான வேதனையை
மனக்கிடங்கில்...!
Sunday, February 24, 2008
அற்புத மலர்
காதலிப்பவர்கள்
மிகவும் கொடியவர்கள்...
பெற்றோர்களை மதிக்காத
பயங்கர தீவிரவாதிகள்...
இவர்களுக்கு தண்டனை
தற்கொலையன்றி வேறில்லை...
காதல் ஒரு பாவச்செயல்!
இந்து முன்னணியினரின்
எதிர்ப்புப் போராட்டம்
காவல் துறையினரின்
ஒடுக்கு முறைகள்
சாதி வெறியர்களின்
அடங்காத கோபத்தில்
காதல் ஒரு பாவச்செயல்!!
ஆண்டாண்டு காலமாய்
அனைத்தையும் தாண்டி
எங்கோ ஒரு மூளையில்
நாள்தோறும் அழகாய்
பூத்து விடுகின்றது பிறரறியாமல்
காதல் என்கிற அற்புதமலர்.
மிகவும் கொடியவர்கள்...
பெற்றோர்களை மதிக்காத
பயங்கர தீவிரவாதிகள்...
இவர்களுக்கு தண்டனை
தற்கொலையன்றி வேறில்லை...
காதல் ஒரு பாவச்செயல்!
இந்து முன்னணியினரின்
எதிர்ப்புப் போராட்டம்
காவல் துறையினரின்
ஒடுக்கு முறைகள்
சாதி வெறியர்களின்
அடங்காத கோபத்தில்
காதல் ஒரு பாவச்செயல்!!
ஆண்டாண்டு காலமாய்
அனைத்தையும் தாண்டி
எங்கோ ஒரு மூளையில்
நாள்தோறும் அழகாய்
பூத்து விடுகின்றது பிறரறியாமல்
காதல் என்கிற அற்புதமலர்.
Tuesday, January 22, 2008
மழைக்காலம்!
மழைக்கால இரவொன்றில்
மாநகரின் நெரிசலில் தப்பி
அடுக்கத்தின் அறையொன்றில்
சொற்களைக் கோர்த்துக்
கொண்டிருந்தேன்...
அமைதியான சூழலில்
எஞ்சியிருந்த தாள்களில்
நனைந்த நினைவுகளைப்
பிழிந்தபடி!
மாநகரின் நெரிசலில் தப்பி
அடுக்கத்தின் அறையொன்றில்
சொற்களைக் கோர்த்துக்
கொண்டிருந்தேன்...
அமைதியான சூழலில்
எஞ்சியிருந்த தாள்களில்
நனைந்த நினைவுகளைப்
பிழிந்தபடி!
Monday, January 21, 2008
வாழ்க்கைச் சக்கரங்கள்
என்னைப் பற்றி அவளும்,
அவளைப் பற்றி நானும்,
இன்னும் சரியாக...
புரிந்து கொள்ளவே இல்லை
ஆனால்.....!
இணைப்பிரியாத தண்டவாளத்தில்
வாழ்க்கைச் சக்கரங்கள்
உருண்டோடிக் கொண்டிருக்கின்றன.
சத்தமிட்டபடியே.....
அவளைப் பற்றி நானும்,
இன்னும் சரியாக...
புரிந்து கொள்ளவே இல்லை
ஆனால்.....!
இணைப்பிரியாத தண்டவாளத்தில்
வாழ்க்கைச் சக்கரங்கள்
உருண்டோடிக் கொண்டிருக்கின்றன.
சத்தமிட்டபடியே.....
மெளனம் உடைக்கையில்....!
தேனாக குழைகிறது!
வெறுப்பாக வருகிறது!
முள்ளாக தைக்கின்றது!
தேள் கொடுக்காக
நஞ்தைக் கக்குகிறது...!
சில நேரங்களில்
சில பெண்கள்
மெளனம் உடைக்கையில்...!
வெறுப்பாக வருகிறது!
முள்ளாக தைக்கின்றது!
தேள் கொடுக்காக
நஞ்தைக் கக்குகிறது...!
சில நேரங்களில்
சில பெண்கள்
மெளனம் உடைக்கையில்...!
Wednesday, January 16, 2008
லிமரைக்கூ....
*வங்கிகள் கொடுக்கும் கடன்
வட்டிக் கணக்கை பார்த்த பின்னே
வேதனை வந்திடும் உடன்.
*அறிவை வளர்க்குமிடம் பள்ளி
சகுனம் பார்த்த ஆசிரியை முறைக்க
சுவற்றில் கத்தும் பல்லி
*சிறுமிக்கு கூட திருமணம்
இன்னும் திருந்தாத மடமை மக்கள்
கைம்பெண்ணுக்கு மறுக்கிறார் மறுமணம்.
*சூறாவளியால் எண்ணற்றோர் பலி
எவ்வளவு நிவாரணம் கொடுத்தாலும் தீராது
பாதிக்கப் பட்டோரின் வலி.
*யானையின் பலம் தும்பிக்கை
வாழ்க்கையில் வெற்றி கிட்டும் வரையில்
நமக்கு வேண்டும் நம்பிக்கை.
Subscribe to:
Comments (Atom)