பேராசை கொண்ட மாந்தன்
மரங்களை வெட்டினான்
காடுகள் அழிந்து போயின
விலங்குகள் ஊருக்குள்...
பறவைகள் புகலிடம் தேடி
பறந்து திரிகின்றன...
பலஅரிய உயிரினங்கள் இன்று
அழிந்து வருகின்றன...
காற்று நஞ்சாகிப் போனது
அறிவியல் வளர்ச்சியால் !
ஓசோனில் ஓட்டை விழுந்தது
நச்சுப் புகை சுழற்சியால்
நிலநடுக்கம்,சுனாமி,காட்டுத்தீ
காரணமென்ன தெரியுமா ?
தன்னலம் கொண்ட மாந்தனின்
தவறுதானென்று புரியுமா !
நாளைய தலைமுறை பற்றிய
கவலை கொள்...
அவர்கள் வாழ்ந்திட சூழலை
விட்டுச் செல்...
இன்றுநான் நாளை நீ மண்ணுக்குள்
என்பதை புரிந்துகொள்...
என்றும் அழியாதது பூமிதான்
தெரிந்துகொள்...
உயிர்கள் வாழ வளியை
கொடுக்கும் பூமி
அணுகுண்டு ஏவுகணைகளின் வலியை
தாங்கிடும் பூமி
பல்லாயிரம் உயிர் இனங்களை
கண்டதிந்த பூமி
பல கோடி ஆண்டுகள்
வாழுமிந்த பூமி...
Sunday, March 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
hi....keep it up
www.shiblypoems.blogspot.com
tc
thank you
வெகு அருமை. தொடர்ந்து எழுதுங்கள்
பிரேம்குமார், புதுவை
Post a Comment